வெள்ளகோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 30 பேர், 5,459 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
முதல் தரம் ஒரு கிலோ ரூ.30.80-க்கும், இரண்டாம் தரம் ரூ.26.15-க்கும், சராசரியாக ரூ.30.20-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 டன் தேங்காய்கள் ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இதேபோல, கொப்பரை ஏலத்தில் 1,502 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.75-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1502 கிலோ கொப்பரை, ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 34 விவசாயிகள் பங்கேற்றனர் என, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரங்கன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago