நெருப்பூர் அருகே கடமான் வேட்டை 8 பேர் அடங்கிய கும்பல் கைது :

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கடமானை வேட்டையாடிய 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட நெருப்பூர் பதனவாடி காப்புக்காட்டில் வேட்டை தடுப்பு ரோந்துப் பணியில் வனச் சரகர் முருகன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஏமனூர் சாலையில் கோரப்பள்ளம் என்ற இடத்தில் ஒரு குழுவினர் சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வனத்தில் கடமான் ஒன்றை வேட்டையாடி அனைவரும் சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. எனவே, ஒட்டனூர் அடுத்த பண்ணவாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (35), முத்துசாமி (55), கண்ணையன் (55), மாதையன் (55), மற்றொரு முத்துசாமி (60), பொன்னம்மாள் (60), சின்னதுரை (40), சின்னப்பொண்ணு (50) ஆகிய 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் நாயுடு உத்தரவின் பேரில் மான் வேட்டையில் ஈடுபட்ட அனைவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வன விலங்குகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்