பாமக நிர்வாகி படுகொலைக்கு காரணமானோரை கைது செய்க : ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளரும், அப்பகுதி மக்களின் நன்மதிப் பைப் பெற்றவருமான தேவமணிதிருநள்ளாறில் கூலிப்படையின ரால் கொடூரமான முறையில்படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனைய டைந்தேன்.

தேவமணி பாமக தொடங்கப் பட்ட நாளில் இருந்தே அப்பகுதி யில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர். புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வரி களை அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டவிரோதமாக உயர்த்திய போது, அதனால் பொதுமக் களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களையும் நோக்குடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்து வரி உயர்வை ரத்து செய்தவர்.

புதுவை மாநிலத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட மதுக்கடைகள் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி அவற்றை மூடுவதற்கு வகை செய்தவர்.

திருநள்ளார் மக்களின் நன் மதிப்பைப் பெற்ற அவர், அரசியலிலும், பொதுவாழ்விலும் உயரங்களை தொட்டிருக்க வேண்டியவர்.

மிக இளம் வயதில் அவர் நம்மைவிட்டு பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடிய வில்லை. தேவமணியை படுகொலை செய் தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும். தேவ மணியின் படுகொலைக்கு காரண மானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவரது குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்