தருமபுரி மாவட்டத்தில் 2863 விவசாயிகளுக்கு ரூ.4 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அதில், பாதிப்படைந்த பயிர்களுக்கு காப் பீட்டுத் தொகை விரைந்துவழங்க வேண்டும் என கடந்த மாதம் நடந்த விவசாயிகளுக்கானமாதாந்திர குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அந்த கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட் டத்தில் பயிர் பாதிப்புக்கு உள்ளான 2863 விவசாயிகளுக்கு ரூ.4.07 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago