ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நவ.9-ல் குறைதீர் கூட்டம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவ. 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் இருந்தால் அதற்கான முறையீட்டை வரும் 27-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

இந்தக் கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்துக்கு ஒரு நிர்வாகி வீதம் பங்கேற்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE