மதுரையைச் சேர்ந்தவர் : கடத்தி கொலை :

தென்காசி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மயக்கமடைந்த நிலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். உடன் இருந்தவரிடம் தென்காசி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தவர் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த முகம்மது அனீஸ் கமால் (48) என்பது தெரியவந்தது. இவர், மதுரையில் மல்டிலெவல் மார்க்கெட்டி நடத்தி பலருக்கு பணம் கொடுக்காத புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து சிலர் இவரை கடத்திச் சென்று தாக்கியதில் இறந்தது தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE