- பசுந்தேயிலை அளித்த விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.34 லட்சம் பகிர்ந்தளிப்பு :

கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை அளித்த சிறு விவசாயிகளுக்கு, கூடுதலாக ரூ.34 லட்சம் தொகையை பகிர்ந்தளிக்க இண்ட்கோ செர்வ் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக இண்ட்கோசர்வ் மேலாண்மை இயக்குநர் சுப்ரியா சாஹூ கூறியதாவது:

இண்ட்கோசர்வ் நிறுவனமானது சுமார் 30,000-க்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகளை உள்ளடக்கிய இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு இணையமாக உருவெடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் தேவையை அறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன்கீழ் 16 தொழில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கைகாட்டிதொழில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையும் ஒன்றாகும்.

இத்தொழிற்சாலையானது 2020-21-ம் ஆண்டில் ஈட்டிய லாபத்தில் இருந்து அத்தொழிற்சாலைக்கு பசுந் தேயிலை அளித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழக்கமாக வழங்கப்பட்ட இலைப் பணத்தைவிட கூடுதல் இலைப் பணமாக கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.34 லட்சத்து 8,844 வழங்க அனுமதி கோரப்பட்டது.இதையடுத்து, கைகாட்டி தொழில் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலையானது 2020-21-ம் ஆண்டில் ஈட்டிய லாபத்தில் இருந்து ரூ.34 லட்சத்து 8,844 நிதியை கூடுதல் இலைப் பணமாக பசுந்தேயிலை அளித்த சிறு தேயிலை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்சாலையில் பசுந்தேயிலை அளித்த 600 சிறு தேயிலை பெண் விவசாயிகள் உட்பட சுமார்1,500 விவசாயிகள் பலனடைவர். இதன் மூலம் கைகாட்டி தொழில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை, பிற கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. ஏனைய கூட்டுறவு தொழிற்சாலைகளும் இதுபோன்று லாபம் ஈட்டி, சிறுதேயிலை விவசாயிகளுக்கு கூடுதல் இலைப் பணம் அளிப்பதை தங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்