சேலத்தில் முக்கிய சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக மாநகராட்சி சார்பில் ‘ஃபேவர் பிளாக்’ மற்றும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, அவற்றில் பொருட்களை அடுக்கி விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதனால், நேற்று மக்கள் சாலைகளில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டது. வாகனங்கள் அதிகரிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் பாதசாரிகள் நடந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக பெரியவர்கள், சிறுவர்களை அழைத்து வந்தவர்கள் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக, சேலம் சாந்தி தியேட்டர் ரோடு, ஓமலூர் ரோடு, மெய்யனூர் சாலை என பல இடங்களிலும் நடைபாதை ஆக்கிரமிப்பை பார்க்க முடிந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago