காணாமல் போன குழந்தை ஏரியில் சடலமாக மீட்பு :

By செய்திப்பிரிவு

ஒரகடம் அருகே வீட்டிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த உமையாள் பரணிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கிரஷர் உரிமையாளர் சுதாகர். இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று வீட்டில் இருந்த இவர்களது இரண்டரை வயது மகள் பிரதிக்ஷா திடீரென காணாமல் போனது. புகாரின்பேரில் ஒரகடம் போலீஸார் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள ஏரியில் குழந்தை மூழ்கி இறந்தது தெரியவந்தது. போலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்