டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு :

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பின்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஜெகநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றனர்.இந்நிலையில், நேற்று காலை கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்து அங்கு சென்று ஊத்தங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையின் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE