பட்டாசு கடை உரிமம் பெற தேதி நீட்டிப்பு :

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளியின் போது பட்டாசு கடை நடத்த அனுமதி பெறுவதற்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளியை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைத்து வர்த்தகம் மேற்கொள்ள விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களில் இணைய வழியில், வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் வகையில் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரரின் புகைப்படம், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஆதார் அல்லது பான் அல்லது வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்கள்,பட்டா அல்லது சொத்து பத்திரம்,வாடகை கட்டிடம் எனில் நோட்டரி வழக்கறி ஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட்டதற்கான அசல் ரசீது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட வரைபடத்தின் 2 பிரதிகள் ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண் டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்