விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.27.88 லட்சம் நிதியுதவி :

நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(37). தலைஞாயிறு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஜூலை 30-ம் தேதி விபத்தில் உயிரிழந்தார். இதனால், அவரை சார்ந்திருந்த அவரது தந்தை, மனைவி, குழந்தைகள் நிலைகுலைந்து போயினர். இதையடுத்து, பிரபாகரனுடன் கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 5,577 போலீஸார் இணைந்து, அவரது குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவு செய்தனர். அதன்படி, சமூக வலைதளம் மூலம் இணைந்த இவர்கள் தலா ரூ.500 வீதம் வழங்கி ரூ.27,88,500 திரட்டினர்.

தொடர்ந்து, பிரபாகரனின் மூத்த மகன் அகிலேஷ்(14) பெயரில் ரூ.11,24,610, மற்றொரு மகன் அபூர்வன்(3) பெயரில் ரூ.7,38,606 என காப்பீடு நிறுவனத்திலும், பிரபாகரனின் மனைவி பவானி(33) பெயரில் ரூ.55,400, பிரபாகரனின் தந்தை ராமஜெயத்தின் பெயரில் ரூ.1 லட்சம் என அவர்களின் வங்கிக்கணக்கிலும் டெபாசிட் செய்தனர். அதற்கான சான்றுகளை நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபாகரனின் குடும்பத்தினரிடம் போலீஸார் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்