தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியுசி அலுவலகத்தில், ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநகர குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாநகரத் தலைவர் பி.செல்வம், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, தெரு வியாபார தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. எனவே, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் நலவாரிய ஆன்லைன் பதிவு நடவடிக்கைகளை காலதாமதமின்றி தொடர வேண்டும். டிச.7-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் கோரிக்கை மாநாட்டில், தஞ்சாவூரிலிருந்து ஏராளமானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago