காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் காரைக்காலில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் வலையில் மிகப் பெரிய சுறா மீன் சிக்கியது. 8 அடி நீளமும், ஒன்றரை அடி சுற்றளவும் கொண்ட இந்த சுறா மீன் 300 கிலோ எடையுடன் இருந்தது.
நேற்று அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த மீனவர்கள், அந்த சுறாமீனை இறக்கி, விற்பனைக்காக ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago