கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் - ஐப்பசி திருவிழா நாட்கால் நடும் நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசு வாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அக்.21-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோயில் முன்பு நாட்கால் நடும் விழா நடந்தது. விழாவில், கோயில் நிர்வாக அலுவலர் நாகராஜன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, 21-ம் தேதி அம்பாள் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்தாண்டும் 9-ம் நாளான 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறாது. அதேபோல், நவ.1-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண வைபவமும் அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என கூறப்படுகிறது.

திருவிழா காலங்களில் காலையில் நடைபெறும் வீதி உலா இந்தாண்டு நடைபெறாது. மாலையில் சுவாமி, அம்பாள் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்