திருவள்ளூர் பகுதிகளில் இன்றைய மின்தடை :

திருவள்ளூர் பகுதிகளில் இன்று (அக். 16) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட காக்களூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆகவே, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜெயா நகர், பூங்கா நகர், வள்ளுவர்புரம், ஆஞ்சநேயபுரம், காக்களூர் ஹவுசிங் போர்டு, காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE