அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் வரும் 12-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மக்கள் அனைவரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE