நாமக்கல் வழியாக கர்நாடகாவுக்கு - கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

மதுரையில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசியை நாமக்கல் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் அடுத்த கீரம்பூர் சுங்கச்சாவடியில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மதுரையில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரியை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், லாரியில் மதுரையில் இருந்து 25 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸார் திருவள்ளுவர் மாவட்டம் தாளக்காஞ்சேரி கீழாண்டை வீதியைச் சேர்ந்த லோகநாதன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE