சேலம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 17 எஸ்ஐ உள்ளிட்ட 55 போலீஸாருக்கு விருப்ப இடமாறுதல் உத்தரவை எஸ்பி அபிநவ் வழங்கினார்.
தமிழகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, சேலம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் எஸ்ஐ-க்கள் மற்றும் போலீஸார் விருப்ப இடமாறுதல் கோரி மனு அளித்தனர்.
இதையடுத்து, இடமாறுதல் முகாம் நடைபெற்றது. இதில், இடமாறுதல் கேட்டிருந்தவர்களிடம் எஸ்பி அபிநவ் விசாரித்து, 17 எஸ்ஐ-க்கள் உள்ளிட்ட 55 போலீஸாருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago