தமிழர்களின் வீர விளையாட்டும், தற்காப்புக் கலையுமான சிலம்பம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் 4 வயது சிறுமி தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை கவர்ந்தார்.
சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், திவ்ய தம்பதியின் மகள் லட்சிதா (4). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். தமிழர்களின் வீரவிளையாட்டும், தற்காப்பு கலையுமான சிலம்பத்தை கடந்த இரு ஆண்டுகளாக இவர் கற்று வருகிறார்.இக்கலையை பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறுமி லட்சிதா, தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில், இவர் ஒற்றை நெடுங்கம்பு கொண்டு சுவடு, ஒற்றை சுவடு, இரட்டை சுவடு, முக்கோணச் சுவடு உள்ளிட்ட சிலம்பங்களை சுற்றி பார்வையாளர்களை கவர்ந்தார்.
சிறுமியை மருத்துவர் ராணி அறிவுக்கரசு மற்றும் பொதுமக்கள் பாராட் டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago