சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் மீட்பு :

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் அருகே வெளியாத்தூரைச் சேர்ந்தவர் அறிவுக்கரசு (56). இவர் தனது மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழ்கிறார். மேலும் அறிவுக்கரசின் தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அறிவுக்கரசு நேற்று காலை சிவகங்கை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள், ஆட்சியரின் கார் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் அவரை தடுத்துக் காப்பாற்றினர். பிறகு அங்கு வந்த போலீஸார் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE