பூந்தமல்லி அருகே நிகழ்ந்த : சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் சீனிவாஸ் (21). இவர் பெங்களூரூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 2 நாட்கள் விடுமுறை என்பதால், பெங்களூரில் இருந்து அர்ஜுன் நேற்றுமுன்தினம் பைக்கில் புறப்பட்டு வந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஏசுராஜன் என்பவர் சாலையைக் கடந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது பைக் மோதியது. இதில், ஏசுராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே சமயம், அர்ஜுன் சீனிவாஸ் சாலையின் எதிர் திசையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில், அர்ஜுன் சீனிவாசும் சம்பவ இடத்திலேயே அடிபட்டு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து நடந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE