குடும்பத் தகராறால் தாய், மகள் தற்கொலை :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவர் மனைவி தாஜ்நிஷா(40). இவர்களது மகள் ஷகானா பானு(18), ப்ளஸ் 2 வரை படித்துள்ளார்.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக சம்சுதீனும், தாஜ்நிஷாவும் கடந்த ஓராண்டாக சரிவர பேசிக் கொள்வதில்லை. இந்நிலையில்,நேற்று முன்தினம் சம்சுதீன் வழக்கம்போல அவரது கடைக்குச் சென்று விட்டார்.வீட்டில் இருந்த தாஜ்நிஷா, ஷகானா ஆகியோர் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டனர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீஸார் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்சுதீனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE