மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது: தாயனூர் கிராம சபையில் தீர்மானம் :

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் தாயனூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாயனூில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சிமன்றத் தலைவர் தேவி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், தாயனூர் ஊராட்சியில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் விவசாயத் தொழிலையும், கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், தாயனூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நடைபெறும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE