திருவள்ளூர் மாவட்ட 371 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ள வட்டாரங்கள், ஊராட்சிகள் தவிர மற்ற 371ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியான இன்று (அக்.2) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர் தேர்தல் நடைபெறும் பூண்டி, சோழவரம், திருவாலங்காடு ஆகிய வட்டாரங்களிலும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

ஆகவே, அந்த வட்டாரங்கள் மற்றும் ஊராட்சிகள் தவிர்த்து, மற்ற 371 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியான இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE