காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணி முதல் 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 9018 கனஅடியாக இருந்தது. நேற்று முன்தினம் 73.60 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 72.68 அடியாக சரிந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 35.38 டிஎம்சி-யாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago