மாணவர்களுக்கு பேச்சு போட்டி :

தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், தி.மலை அரசு கலைக் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், அரசு பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு பரிசுத் தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE