காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விவசாயிகள் தங்கள் பகுதிக்குட்பட்டவட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று, மாவட்ட ஆட்சியரகத்தை காணொலி மூலம் தொடர்புகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE