காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழை : பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேக்கம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், வண்டலூர், தாம்பரம் மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலையில் வாகனங்கள் மெதுவாகச் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சிட்லப்பாக்கம் பிரதான சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE