கந்தசுவாமி கோயில் அன்னதானக் கூடத்தில் : உணவு விநியோகம் தொடக்கம் :

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தமிழக அரசு உத்தரவின்பேரில் கோயில் வளாகத்தில் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு, நாள்தோறும் 100 நபர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு அன்னதானக் கூடத்தில் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது. எனினும், நாள்தோறும் 100 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழக அரசின் தளர்வுகள் காரணமாக கந்தசுவாமி கோயிலின் அன்னதானக் கூடத்தில் நேற்று மீண்டும் உணவு விநியோகம் தொடங்கப்பட்டது. இதில், 100 நபர்கள் அமரவைக்கப்பட்டு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினர் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE