கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு :

காரைக்காலில் உள்ள உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள உஜ் ஜைனி காளியம்மன் கோயிலை நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டுச் சென்ற பூசாரி, நேற்று காலை வந்து பார்த்தபோது, கோயிலின் பின்பக்க கதவு, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்