மின்னல் தாக்கி தொழிலாளி மரணம் :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள எம்.வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் முருகையா (55). இவருக்கு சொந்தமான ஆடுகளைநேற்று முன்தினம் மாலை ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள மயானப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் முருகையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு ஆடுகள் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்ததையடுத்து உறவினர்கள் தேடிச் சென்று பார்த்தபோது முருகையா மின்னல் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE