முருங்கைக்காய் விலை சரிவு :

வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஏலம் நடை பெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொண்டு வரும் முருங்கைக்காயை, வியாபாரிகள் வாங்கிகோவை, சென்னை சந்தைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

நேற்று நடைபெற்ற ஏலத்தில்12 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு வந்தது. மர முருங்கை கிலோ ரூ.9-க்கும், செடி முருங்கை மற்றும் கரும்பு முருங்கை கிலோ ரூ.12-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.22-க்குவிற்பனையான நிலையில், நேற்று விலை குறைந்து விற்பனையானதால் விவசாயிகள் கவலைஅடைந்தனர். தற்போது புரட்டாசிமாதம் தொடங்கி உள்ளதால், வரும்நாட்களில் முருங்கை விலை உயரவாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்