நகராட்சி ஆணையர் மீது தற்காலிக பணியாளர்கள் புகார் :

காங்கயம் நகராட்சி ஆணையர் மீது, பெண் சுகாதார பணியாளர்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அதில், “காங்கயம் நகராட்சியில் தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளராக இருந்து வருகிறோம். நகராட்சி ஆணையர் அவரது வீட்டுக்கு எங்களை அழைத்து சுகாதாரப் பணி மேற்கொள்ளுமாறு கூறி, அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இல்லாவிட்டால், பணியில் இருந்து நிறுத்திவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, “அவ்வாறு நான் தவறு செய்திருந்தால் இறைவன் தண்டிக்கட்டும். அவர்கள் கூறுவது பொய். நகராட்சியில் அவர்கள் சரிவர பணிபுரிவதில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்