தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் வெளியிட்டசெய்திக்குறிப்பில் ‘‘பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு உதவும்வகையில் பவர் டிரில்லர், ரொட்டாவெட்டர், பயிர் தெளிப்பான் என பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பாண்டில்தோட்டக் கலைத் துறை மூலம்விவசாயிகளுக்கு மினி டிராக்டர்வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. உடுமலை பகுதியில் 3 விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, உடுமலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.