கடலூர் ரவுடி மனைவி கொலையில் 4 பேர் கைது :

கடலூரில் நடந்த ரவுடியின் மனைவி கொலையில் 2 சிறார்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் குப்பன்குளத்தைச் சேர்ந்த ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் போலீஸார் ரவுடி கிருஷ்ணாவை என்கவுண்டர் செய்த னர். இதில் கிருஷ்ணா இறந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடலூர் சீனுவாசன் நகரில் கிருஷ்ணா மனைவி காந்திமதி (27) வெட்டப்பட்டார். அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நள்ளிரவில் இறந்தார். ரவுடி குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகித்த போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். இதுதொடர்பாக திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கூடா நட்பால் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. கிருஷ்ணா இறந்த நிலையில் அவரது நண்பரான அதேப் பகுதியைச் சேர்ந்த அர விந்த் என்ற வீரமணி (23) உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கூடா நட்பாக மாறி உள்ளது.

இதனை காந்திமதி குடும்பத் தினர் கண்டித்ததால், அவரும் அரவிந்தை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரவிந்த் அவரது நண்பரான 16 வயது சிறுவன் மூலமாக காந்திமதியை மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு அழைத்து வரச் செய்துள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் 4 பேர் சேர்ந்து காந்திமதியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து கொலையாளி களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் திருப் பாதிரிபுலியூரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத் திற்குச் சென்று சுற்றி வளைத்த போலீஸார் அரவிந்த், அதே பகுதியைச் சேர்ந்த சக்தி (19) மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த 17, 16 வயது சிறுவர்களையும் கைது செய்தனர்.

கொலையான காந்திமதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து இருப்பது குறிப்பி டத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்