வத்தலகுண்டு பகுதியில் - பூட்டிய வீடுகளில் திருட முயற்சி : சின்னுபட்டியில் 4 பவுன் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு அருகே திருநகரில் கேரளாவைச் சேர்ந்த அனிஸ், ஜக்குருதீன் ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். ஏலக்காய் வியாபாரிகளான இரு வரும் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் இருவரது வீட்டின் கதவுகளும் உடைக்கப் பட்டு கிடந்ததை நேற்று காலை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். வத்தல குண்டு இன்ஸ்பெக்டர் குமரன் விசாரணை மேற்கொண்டார். பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் சிதறிக் கிடந்தன. வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்காததால் திருடர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரிய வந்தது.

4 பவுன் திருட்டு

வத்தலகுண்டு அருகே சின்னுபட்டியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

நேற்று காலை இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE