சிவகங்கை அருகே 28 ஆண்டுகளாக வீடின்றி தவித்த - 27 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா :

சிவகங்கை அருகே 28 ஆண்டு களாக வீடின்றி தவித்த 27 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை ஆட்சியர் வழங்கினார்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சி காமராஜர் காலனியில் 27 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் செருப்புத் தைக்கும் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 28 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் இடத்துக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக்கோரியும், அரசின் திட்டத்தில் வீடு கட்டித் தரும்படியும் கேட்டு அதிகாரி களிடம் மனு அளித்து வந்தனர்.

இது தொடர்பாக ஆய்வு செய்து உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வரு வாய்த் துறையினருக்கு ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். அதன்படி கோட்டாட்சியர் முத்துக்கழுவன், வட்டாட்சியர் தர்மலிங்கம், துணை வட்டாட்சியர் லெனின் ஆகியோர் 27 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, இலவச பட்டாவை பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார். பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE