தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் ஊராட்சியில் செங்குத்தான மலை மீது புல்லஹள்ளி கிராமம் உள்ளது. இங்கு சாலை வசதியில்லாததால் போக்குவரத்து வசதி இல்லை. இக்கிராமத்துக்கு கால்நடையாக தான் பயணிக்க வேண்டும்.
இந்நிலையில், இங்கு தளி வட்டார மருத்துவ அலுவலர் ஷாலினி முயற்சியால் மருத்துவர் ஞானவேல், மருத்துவர் விக்னேஷ், ஆகியோர் தலைமையில் செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவக் குழுவினர் கால்நடையாக மலைக்கிராமத்துக்கு சென்றனர்.முகாமுக்கு முன்னர் மருத்துவ குழுவினர் ஒவ்வொரு வீடாகச் சென்று கரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் முகாமில் பங்கேற்ற மலைவாழ் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்தினர். முகாமில், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago