இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை :

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை முகாம் காரைக்காலில் அண்மையில் நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும் செப்.17-ம் தேதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ‘ஓட்டுநர் தினமாக' கொண்டாடி வருகிறது. இதையொட்டி, சாலை விபத்துகளுக்கு கண்பார்வை குறைபாடும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதால், காரைக்கால் நிரவி சாலையில் உள்ள சாரதி ஏஜென்சி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வளாகத்தில், வாசன் கண் மருத்துவமனை உதவியுடன் வாகன ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் பங்கேற்று, கண் பரிசோதனை செய்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திருச்சி மண்டல இந்தியன் ஆயில் விற்பனை அதிகாரி ஆர்.பிரவீன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாரதி ஏஜென்சி உரிமையாளர் பா.குணசீலன் செய்திருந்தார். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE