அலைபேசி உதிரி பாகங்கள் திருட்டு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பகீம் ரகுமான் என்பவர் அலைபேசி கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ம் தேதி இரவு விற்பனை முடிந்ததும், கடையை பூட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவில் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்த இளைஞர்கள், அலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றனர். மறுநாள் கடைக்கு வந்த பகீம் ரகுமான், கடை திருந்து கிடப்பதையும், பொருட்கள் திருடு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் அவிநாசிபோலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE