அனுமதியின்றி எடுத்துச் சென்ற : கிரானைட் கற்கள் பர்கூர் அருகே பறிமுதல் :

By செய்திப்பிரிவு

பர்கூர் அருகே அனுமதியின்றி எடுத்துச் சென்ற கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பர்கூர் வட்டாட்சியர் குருநாதன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் குப்பம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வரட்டனப்பள்ளி-எலத்தகிரி பிரிவுச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்தனர். அதில், 5 கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியுடன் கற்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE