கொக்கிரகுளத்தில் ஆண் சடலம் மீட்பு :

திருநெல்வேலி கொக்கிரகுளம் பலாப்பழ ஓடை பகுதியிலிருந்து நேற்று கடுமையான துர்நாற்றம் வீசியது. பாளையங்கோட்டை போலீஸார் அங்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டனர். அந்த நபர் இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். அவர் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE