மேல்செங்கம் அடுத்த கருமாங் குளம் ஏரிக்கரை அருகே உயிரிழந்த நிலையில் இளைஞர் உடல் நேற்று மீட்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மேல்செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27) என்பது தெரியவந்தது.
இது குறித்து அவரது தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், மேல்செங்கம் காவல் துறையினர் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago