கடலூரில் இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை :

கடலூரில் இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் 5 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கடலூர் எஸ்.என் சாவடி பகுதியை சேர்ந்தவர் முகமதுஇஸ்மாயில்(45). இவர் அதே பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 13-ம் தேதி அவர் குடும்பத்துடன் அவரது மகளை சென்னையில் உள்ள கல்லூரிக்கு கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு முகமது இஸ்மாயில் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கடலூர் புதுநகர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்ற பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தன. இது குறித்து முகமதுஇஸ்மாயிலுக்கு போலீஸார் தகவல் தந்தனர். இதனையடுத்து நேற்று அதிகாலை வீட்டு வந்த முகமது இஸ்மாயில் வீட்டுக்குள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ 22 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்