சேலம், நாமக்கல், தருமபுரியில் 11-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் :

சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும், வரும் 11-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியி டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 11-ம் தேதியன்று, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், நீதிமன்றங்களில் நிலு வையில் உள்ள வழக்குகளை எளிய முறையிலும், சமரச முறையிலும், விரைவாகவும் தீர்வு காண முடியும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாமக்கல் மாவட்டத்திலும், தருமபுரி மாவட்டத்திலும் வரும் 11-ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடப்பதாக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான என்.குண சேகரன், தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவருமான குணசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE