அமமுக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது :

திருக்கோவிலூர் அருகே அமமுக பிரமுகர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையில் கடந்த ஜூலை 13-ல் அமமுக பிரமுகர் கோவிந்தன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மணலூர்பேட்டை போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் சேட்டு என்பவர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜி மற்றும் மற்றொரு ராஜி ஆகியோரும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக தெரியவந்தது.

இதையடுத்து மணலூர் பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் இரவு இருவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சேட்டுடன் இணைந்து 3 பேரும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் சேட்டு என்பவர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE