திண்டுக்கல்லில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் :

By செய்திப்பிரிவு

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாறன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது.

தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் தயான்சந்த் பிறந்தநாள் விழா கோப்பைக்கான ஹாக்கி மற்றும் கால்பந்து காட்சிப் போட்டிகள் நடந்தன. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் மூன்று வீரர், வீராங்கனைகளுக்கு கால்பந்துக் கழகச் செயலாளர் சண்முகம் பரிசுகளை வழங்கினார். கால்பந்து, ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரு அணிகளுக்கு தயான்சந்த் பிறந்தநாள் கோப்பை வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்