தூசி அருகே ரூ.2.16 லட்சம் மதிப்பிலான - 100 கிலோ குட்கா பதுக்கியதாக 3 பேர் கைது :

தி.மலை மாவட்டம் தூசி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலை மையிலான காவல் துறையினர், அப்துல்லாபுரம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் நேற்று முன் தினம் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ் வழியாக காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் வசிக்கும் மனோஜ் (24), காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் (30) ஆகியோரிடம் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

மேலும், மனோஜ் அளித்த தகவலின் பேரில், காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் வசிக்கும் செல்வராஜ்(37) என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 93 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தூசி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து மனோஜ், விக்னேஷ், செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ரூ.2.16 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE