கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரத்தில் : புதிதாக 110 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 61,887 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 76 பேர் உட்பட 60,416 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 830 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 29,860 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 44,556 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்